Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

திருச்சியில் கரோனா தொற்றுக்கு ஒரேநாளில் 21 பேர் உயிரிழப்பு :

திருச்சி: திருச்சியில் 590 பேருக்கும், தஞ்சாவூரில் 875 பேருக்கும், திருவாரூரில் 395 பேருக்கும், நாகையில் 542 பேருக்கும், கரூரில் 301 பேருக்கும், புதுக்கோட்டையில் 189 பேருக்கும், பெரம்பலூரில் 140 பேருக்கும், அரியலூரில் 187 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 986, கரூரில் 516, திருவாரூரில் 877, தஞ்சாவூரில் 806, நாகையில் 583, புதுக்கோட்டையில் 277, பெரம்பலூரில் 316, அரியலூரில் 169 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரியலூரில் 3, கரூரில் 7, திருச்சியில் 21, நாகப்பட்டினத்தில் 3, புதுக்கோட்டையில் 9, தஞ்சாவூரில் 9, திருவாரூரில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று புதிதாக 136 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x