Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கூறியதாவது: வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை (கட்டிடம், நீர்வளம்), மின்சாரத் துறை, மாநகராட்சி, ஊரக வளர்ச்சி முகமை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத் துறை, மீன்வளத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிறைவுபெறாத பணிகளை விரைந்து முடிக்க அலுவலர் களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மலை கிராமங்களில் நடைபெறவுள்ள சாலை பணிகளுக்கு வனத்துறை மூலம் உரிய அனுமதி பெற்று பணிகளை விரைவில் தொடங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடி நீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT