Published : 07 Jun 2021 03:15 AM
Last Updated : 07 Jun 2021 03:15 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரிந்த காவல் கண்காணிப்பாளர் சிவகுமாருக்கு புதிய பதவி :

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த டாக்டர் சிவகுமார், சென்னை காவல் துறை அகாடமி துணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஓம் பிரகாஷ் மீனா நியமிக்கப்பட்ட நிலையில், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த டாக்டர் சிவகுமாருக்கு புதிய பணியிடம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மூன்றாவதாக வெளியிடப்பட்ட பட்டியலில் டாக்டர் சிவகுமார், தமிழ்நாடு காவல் துறை அகாடமி துணை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள 15-வது பட்டாலியன் கமாண்டர் செந்தில்குமார், புதுடெல்லியில் உள்ள 8-வது பட்டாலியன் கமாண்டராக இடமாற்றம் செய்யப்பட்டதால், சேலம் மாநகர சட்டம் -ஒழுங்கு துணை ஆணையர் எம்.சந்திரசேகரன், வேலூர் 15-வது பட்டாலியன் கமாண்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x