Published : 07 Jun 2021 03:15 AM
Last Updated : 07 Jun 2021 03:15 AM

மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு :

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (40). இவர், கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மாலா என்பவர் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் தனியாக வசித்து வந்த பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு மின் விளக்கு எரியாததால் அதனை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பன்னீர்செல்வத்தை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது வரும் வழியிலேயே பன்னீர்செல்வம் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இது தொடர்பான தகவலின்பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x