Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM
கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகளை வடிவமைப்பதற்கு 7 பேர் கொண்டகுழுவை உயர்கல்வித் துறை அமைத்துள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, “கலை, அறிவியல், கல்வியியல்கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைக்க கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது வரைவு அறிக்கையை ஜூன் 11-க்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தனிக்குழு, ஆடைக் கட்டுப்பாடு, வகுப்புகளை முழுவதுமாக பதிவுசெய்ய நடவடிக்கை, புகார் பிரிவு உருவாக்குதல், போன்ற பரிந்துரைகள் இடம்பெறக்கூடும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT