Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

தமிழகத்துக்கு இதுவரை 2,922 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்துள்ளது :

சென்னை

கரோனா தொற்றின் 2-வது அலைமிகத் தீவிரமாக உள்ள நிலையில்,பாதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்குத் தேவையானஆக்சிஜன், தமிழ்நாடு, டெல்லி,மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகின்றன.

இதற்கிடையே, சட்டீஸ்கரில் இருந்து 43-வது ஆக்சிஜன் ரயில்(75.84 மெட்ரிக் டன்) திருச்சிக்கும்ஒடிசாவில் இருந்து 44-வது ரயில்(80.69 மெட்ரிக் டன்) கோவைக்கும், மகாராஷ்டிராவில் இருந்து 45-வது ரயில் (56.04 மெ. டன்) சென்னை துறைமுகத்துக்கும் நேற்று வந்தது.

தமிழகத்துக்கு இதுவரை 45ஆக்சிஜன் ரயில்கள் மூலம் மொத்தம் 2,922.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்துள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x