Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி :

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மே மாதத்தில் ரூ.1,02,709 கோடி வசூல் ஆகியுள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது. ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து 8-வது மாதமாக ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கரோனா நெருக்கடி காரணமாக சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 4 வரை ரூ.1,02,709 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘‘விற்பனை ரூ.5 கோடிக்கும் அதிகமாக உள்ளவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஜூன் 4 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடிக்கு கீழ் விற்பனை உள்ளவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஜூலை முதல் வாரம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அபராதம், வட்டி இல்லை‘’ எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x