Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM
அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மறைந்த முன்னாள் முதல்வர்கருணாநிதியின் பிறந்த தினத்தைமுன்னிட்டு தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவித்த திட்டங்கள் இந்தியா மட்டுமின்றி தமிழர்கள் வாழும் நாடுகள் அனைத்திலும் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன.
குறிப்பாக மதுரையில் கலைஞர்நினைவு நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சிஅளிக்கிறது. தமிழ் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசுடன் கூடிய ‘இலக்கிய மாமணி விருது’, ஞானபீடம், சாகித்ய அகாடமி மற்றும் மத்திய, மாநில விருதுகள் பெறும் தமிழக எழுத்தாளர்களுக்கு ‘கனவு இல்லம்’ என்ற செய்தி எழுத்தாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற குறுகிய நாட்களில் தமிழுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் இதுபோன்ற நன்மை பயக்கும் திட்டங்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழக அரசுக்கும் அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT