Published : 06 Jun 2021 03:13 AM
Last Updated : 06 Jun 2021 03:13 AM

பெரியாறு அணை திறக்க கோரி - மேலூரில் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்கு ரத்து :

மதுரை மாவட்டம் மேலூரை சுற்றியுள்ள விளைநிலங்களுக்கு ஒரு போக பாசனத்துக்காக பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி பெரியாறு-வைகை ஒரு போக விவசாயிகள் சங்கத்தினர் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2017-ல் தர்ணா செய்தனர்.

இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது மேலூர் போலீஸார் 2 வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் அமலன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு: தண்ணீர் திறந்துவி டக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதை சட்டவிரோதம் என்று கூற முடியாது. விவசாயிகள் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கில் கூறப் பட்டுள்ளது.

அதற்கான ஆதாரங்களைப் போலீஸார் தாக்கல் செய்ய வில்லை. எனவே, போராட்டம் நடத்திய மேலூர் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x