Published : 06 Jun 2021 03:14 AM
Last Updated : 06 Jun 2021 03:14 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்காக 28 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் நேற்று வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சார்பில், 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 18 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 10 பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் நிர்வாகிகள் நேற்று வழங்கினர். அப்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரவி தேஜா, சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் அஜிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT