Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM
உதகை: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று காலை முதல் கன மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடியது. மழையால், பகல் நேரத்திலேயே கடும் குளிர் வாட்டி வதைத்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் சராசரியாக 7.86 மி.மீட்டர் மழை பதிவானது. நடுவட்டம் 24, அப்பர் பவானி, கூடலூர், கீழ் கோத்தகிரியில் தலா 22, தேவாலா 15, உலிக்கல் 10, கோடநாடு 10, குன்னூர் 7, பந்தலூர் 5, கேத்தி 2, குந்தா 1, உதகை 1 மி.மீட்டர் மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT