Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM
ஈரோடு: கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பழங்கள், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாகனங்களில் கொண்டு சென்று குடியிருப்புப் பகுதிகளில் விற்பனை செய்ய ஈரோடு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தமாகா இளைஞரணி சார்பில் மூன்று வாகனங்களில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக தமாகா மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதியில் கரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு த.மா.கா இளைஞரணி சார்பில் ஊரடங்கு முடியும்வரை, மூன்று வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் பழங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த விலையில் இருந்து 10 சதவீதம் குறைவான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT