Published : 05 Jun 2021 03:13 AM
Last Updated : 05 Jun 2021 03:13 AM

முன்களப் பணியாளர்களாக அறிவிக்க சிலிண்டர் தொழிலாளர்கள் வலியுறுத்தல் :

மனு விவரம்: மதுரை மாவட்டத்தில் சிலிண்டர் விநியோகிக்கும் பணியில் 2,500 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், கடந்த ஆண்டு கரோனா முதல் அலையிலே எவ்விதத் தடையும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் விநியோகம் செய்தனர். 2-வது அலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு தொற்று பாதித்துள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். எங்களின் குடும்ப நிலை கருதி சிலிண்டர்கள் விநியோக தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், முகவர்கள் தொழிலாளர்களாகிய எங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x