Published : 05 Jun 2021 03:13 AM
Last Updated : 05 Jun 2021 03:13 AM

குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட - குளங்கள், பாலங்களை சீரமைக்க ரூ.4.55 கோடிக்கு மதிப்பீடு :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் தேரூர் குளம் உட்பட பல நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு, விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சேத மதிப்புகளை அரசுக்குசமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தேரூர் குளம் மற்றும் பழுதானநீர்நிலைகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் ஆகியோர் ஆய்வுசெய்தனர். அப்போது, தேரூர்க் கால்வாயில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்துள்ள 6 தலைமதகுகள், 15 பாசன மதகுகள் ஆகியவற்றை சரிசெய்ய உத்தேசமாக ரூ.40 லட்சம் செலவாகும். தத்தையார்குளம் மடை, தடுப்பு சுவர் சீரமைக்க வேண்டியுள்ளது. வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த தத்தையார்குளம், மாணிக்கபுத்தேரி குளம், தேரூர்குளம் மற்றும் உபரிநீர் கால்வாய்கள் புனரமைப்பு பணிகள், உயர்மட்ட பாலம் அமைத்தல் ஆகியவற்றுக்கு, ரூ.455 லட்சம் உத்தேச மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு இத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலோடு இந்தப் பணிகள் விரைவில் நடைபெறும் என அமைச்சர் மனோதங்கராஜ் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x