Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM
திருச்சி: மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்த தீபக் எம்.தாமோதர், திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக இருந்த ஆனிவிஜயா ஆகியோர் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக புதிதாக மத்திய மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ள வே.பாலகிருஷ்ணன், திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோல, திருச்சி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.ராதிகாவும், ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT