Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM

புதிதாக 1,117 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

வேலூர்: வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று புதிதாக 1,117 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதுவரை 43,177 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் புதிதாக நேற்று 279 பேர் பாதிக்கப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 341 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,409 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் குணமடைந்து 387 பேர் நேற்று வீடு திரும்பினர். சிகிச்சை பலன் அளிக்காமல் 7 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 497 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43,050-ஆக உயர்ந்துள்ளது. 35,637 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6,974 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 439-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x