Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

ஒரு கோடி தடுப்பூசியை இம்மாதம் வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை

ஜூன் மாதத்தில் ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்றுமத்திய அரசுக்கு பாமக நிறுவனர்ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்துக்குப் போதிய அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கப்படாததால் 18. முதல் 44 வயது உள்ளவர்களுக்கான தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருக்கிறது. இந்திய அளவில் 4.31 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் போடப்பட்டுள்ளது. இதை நியாயப்படுத்த முடியாது.

கரோனா 3-வது அலை பரவலை தடுக்க வேண்டும் என்றால் வரும்டிசம்பர் மாதத்துக்குள் பெரும்பான்மையினருக்கு தடுப்பூசி போட வேண்டும். அந்த இலக்கை அடைய,இனிவரும் நாட்களிலாவது தமிழகத்துக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.

2020-21ல் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி மதிப்பு ரூ.140 லட்சம் கோடி. அதில்தமிழகத்தின் பங்கு ரூ.20 லட்சம் கோடி. அதாவது இந்தியாவின் பொருளாதாரத்தில் 14.28 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்ததாகும்.

இதையே அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் ஒரு கோடியே 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அதில் நான்கில் ஒருபங்குக்கும் குறைவாக தடுப்பூசிகள் வழங்கப்படுவது நியாயமற்ற செயலாகும்.

தமிழகத்தில் இதுவரை 2 டோஸ்தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 72.79 லட்சம். இது தமிழக மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவு.

எனவே, தமிழகத்தின் தடுப்பூசி தேவையைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதத்தில் மத்திய அரசு நேரடி ஒதுக்கீட்டின் மூலமாகவும், உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை மூலமாகவும் குறைந்தபட்சம் ஒரு கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இதற்காக தமிழக அரசும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x