Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM
வன்கொடுமை புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வரும்9-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் அடையாறு மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மணிகண்டன் தரப்பில் வழக்கறிஞர் ஜான் சத்யன், சாந்தினி தரப்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி, போலீஸார் தரப்பில் அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி வாதிட்டனர்.
முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சாந்தினி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அதுவரை மணிகண்டனை கைது செய்யக் கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT