Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM

தமிழகத்துக்கு தடுப்பூசிகளை வழங்கக் கோரி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஜூன் 8-ல் ஆர்ப்பாட்டம் : மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவிப்பு

சென்னை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தடுப்பூசி மருந்துகளுக்கும், கரோனா தடுப்பு மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கடந்த 15 மாதங்களில் மட்டும் பெட்ரோல், டீசல், வரி உயர்வுகள் மூலம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் கோடி நிதிச்சுமை மக்கள் தலையில் ஏற்றப்பட்டுள்ளது

தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்,செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும், ஜிஎஸ்டி வரிவிதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதி முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8-ம் தேதி காலை 10 மணிக்குதமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x