Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM
சென்னை மாவட்ட எம்.பி., எம்எல்ஏக்கள் சார்பில் மாநகராட்சிக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் நேற்று வழங்கப்பட்டன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த26-ம் தேதி 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சிக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொகுதி எம்எல்ஏக்கள் சார்பில் 160 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக வட சென்னை மக்களவைத் தொகுதி எம்பி, திருவொற்றியூர், ராயபுரம், எழும்பூர், தியாகராய நகர் எம்எல்ஏக்கள் சார்பில் நேற்று 100 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உதயநிதி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் நேற்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலாநிதி விராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் கே.பி.சங்கர், மூர்த்தி, இ.பரந்தாமன், ஜெ.கருணாநிதி, மாநகராட்சி இணை ஆணையர் சங்கர்லால் குமாவத், துணை ஆணையர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ்,.மேகநாத ரெட்டி, விஷூ மகாஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT