Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் 95 சதவீத காவல் துறையினர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரி வித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை காவல் துறையினர் தங்களது சொந்த செலவில் வழங்கி வருகின்றனர். அதன்படி கமுதி பேருந்து நிலையத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தலைமை வகித்தார்.
டிஎஸ்பி எஸ்.பிரசன்னா, காவல் ஆய்வாளர்கள் அன்பு பிரகாஷ்(கமுதி), மோகன் (அபிராமம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 50 ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, ரூ.200 மதிப்புள்ள காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டன.
அதனையடுத்து கமுதி கோட்டைமேட்டில் உள்ள தனி ஆயுதப்படை வளாகத்தில், காவலர்களின் குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் 95 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இணை நோய் உள்ள 5 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். அவர்களுக்கும் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT