Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

ரயிலில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் சாத்தூரில் பறிமுதல் :

சாத்தூரில் ரயில் நிலையம் அருகில் நேற்று காலை மங்களூர் விரைவு ரயிலில் இருந்து இறங்கிய இரு நபர்கள் சந்தேகத்துக்கு இடமாக ரயில்வே கேட் அருகில் நின் றுள்ளனர்.

அவர்களை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட அம் மாபட்டி போலீஸார் சோத னையிட்டபோது அவர்கள் கர்நாடகா மாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவர்கள் சாத்தூர் அருகே உள்ள நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி மற்றும் முருகன் என்பது தெரிய வந்தது.

90 மதுபாட்டில்களை பறி முதல் செய்த போலீஸார், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x