Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

நாயை கொன்றவர் மீது வழக்கு :

மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள குபேரன் நகரைச் சேர்ந்தவர் பொன்னையா(60). இவர் வளர்த்து வந்த நாயை, கடந்த 1-ம் தேதி தூக்கிட்டுக் கொலை செய்து புதைத்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மங்கலராஜ் என்பவர் விலங்குகள் நல ஆர்வலர் செம்பியனேந்தலைச் சேர்ந்த விஜயகீதாவுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்குச் சென்று விஜயகீதா விசாரித்தபோது பொன்னையா தன் நாயை கொலை செய்து புதைத்திருப்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில் ஊமச்சிகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x