Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM
புதுடெல்லி: அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக நாட்டு மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட பதிவில், “கரோனா தொற்று நோய்க்கு எதிரான மிக வலுவான பாதுகாப்பு தடுப்பூசி ஆகும். அனைவருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக மக்களும் குரல் எழுப்ப வேண்டும். இது தொடர்பாக அரசை தட்டியெழுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இத்துடன், ‘அனைவருக்கும் இலவச தடுப்பூசிக்கு குரல் எழுப்புவோம்’ என்ற ஹேஷ்டேக்கை ராகுல் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பான வீடியோ செய்தி ஒன்றை இணைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT