Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM
காரமடை அருகே வெள்ளியங் காட்டில் உள்ள அன்சூர் பழங் குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (65). இவர் நேற்று மாடு மேய்க்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஒற்றை யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்தை அறிந்து அங்குவந்த வனத்துறையினர் உடலைமீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து, உயிரிழந்த ரங்கசாமியின் குடும்பத்துக்கு உடனடி நிவாரணமாக வனத் துறை சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT