Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

பள்ளிகளுக்கு மாற்றப்பட்ட தடுப்பூசி முகாம்கள் : 45 வயதுக்கு மேற்பட்டோர் இன்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

அனைத்து தரப்பினரும் எளிதாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் தடுப்பூசி முகாம் மாநகராட்சி பள்ளி களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறுதரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி களில் தடுப்பூசி மையங்கள் மாற்றப் பட்டுள்ளன. அதன்படி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கிழக்கு- துடியலூர், மாநகராட்சி தொடக்கப்பள்ளி- வெள்ளக்கிணறு, மாநகராட்சி தொடக்கப்பள்ளி- சரவணம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி- காந்திமாநகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி- பி.என்.பாளையம், ஜனதாநகர் ஆரம்ப பள்ளி- சிவானந்தபுரம், சின்னவேடம்பட்டி ஆரம்ப பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி- சேரன் மாநகர், அரசு மேல்நிலைப்பள்ளி- காளப்பட்டி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி- நேருநகர்,மாநகராட்சி நடுநிலைப்பள்ளி - மசக்காளிபாளையம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி -உடையாம்பாளை யம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி-ஒண்டிபுதூர், மாநகராட்சி பெண்கள்மேல்நிலைப்பள்ளி- ராமகிருஷ்ணா புரம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி- சிங்காநல்லூர்.

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி- உப்பிலிபாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி- கிருஷ்ணாபுரம், மாநகராட்சிநடுநிலைப் பள்ளி- நீலிக்கோணாம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி- தடாகம் ரோடு, இடையர்பாளை யம், மாநகராட்சி ஆரம்ப பள்ளி- யூனியன்ஆபீஸ் ரோடு, கவுண்டம்பாளையம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி- கோயில்மேடு, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி- பி.என்.புதூர், மருதமலை சுப்பிரமணியசுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி- வடவள்ளி, மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி- ராமலிங்கம் காலனி,எஸ்ஆர்பி அம்மணியம்மாள் மாந கராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி-ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி ஆரம்ப பள்ளி- செல்வபுரம் வடக்கு, அரசு மேல்நிலைப்பள்ளி-குனியமுத்தூர், அரசு மேல்நிலைப்பள்ளி- குளத்துப்பாளையம், மாநகராட்சி ஆரம்ப பள்ளி- குறிச்சி, கே.வி.கே.நகர் ஆரம்ப பள்ளி- குறிச்சி, சித்தன்னபுரம் ஆரம்ப பள்ளி- குறிச்சி, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி- ரங்கநாதபுரம், மாநக ராட்சி மேல்நிலைப்பள்ளி- ரத்தினபுரி,

மாநகராட்சி ஆரம்ப பள்ளி- ராமநாதபுரம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி- சித்தாபுதூர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி- ஒக்கிலியர் காலனி ஆகிய இடங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மேற்கண்ட இடங்களில் இன்று (ஜூன் 3) தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தினசரி தடுப்பூசி இருப்பு நிலவரம் குறித்து அந்தந்த பள்ளிகளில் அறிவிப்பு செய்யப்படும்” என அதிகாரி கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x