Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

இ.எஸ்.ஐ. மூலம் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தல்

திருப்பூர்

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாருக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம்அனுப்பிய கடிதத்தில், ‘திருப்பூரில்பின்னலாடை உற்பத்தித் துறை சார்ந்து, பல லட்சம் தொழிலா ளர்கள் உள்ளனர்.

அனைத்து தொழிலாளர் களையும், தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. இதில், இ.எஸ்.ஐ. காப்பீடு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை மூலமாக இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும். இதற்கு, தொழிலாளர் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x