Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM

திருப்பூர் மாநகரில் முதல்முறையாகபெண் காவல் ஆணையர் நியமனம்திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருந்த ஜி

திருப்பூர் மாநகரில் முதல்முறையாகபெண் காவல் ஆணையர் நியமனம்

திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருந்த ஜி.கார்த்திகேயன் பணியிடம் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ரயில்வே ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த வி.வனிதா, மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகரில் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி காவல் ஆணையராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த திஷா மித்தல் சென்னை மயிலாப்பூர் சரக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x