Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM
முள்ளிப்பாக்கம் அருகே ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக தம்பதியரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த முள்ளிப்பாக்கம் கிராமத்தில் கள்ள சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், திருப்போரூர் போலீஸார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த கன்னியப்பன் மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 35 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சாராய விற்பனைக்கு உதவியாக இருந்து தலைமறைவான மறைமலைநகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT