Published : 03 Jun 2021 03:14 AM
Last Updated : 03 Jun 2021 03:14 AM
கரூர்
கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ரூபன் மனைவி மஞ்சு(32). இவரது தாய், தந்தை இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், கரூர் தனியார் மருத்துவமனையில் மே 31-ம் தேதி சேர்க்கப்பட்டனர். அன்று, ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்காக மஞ்சு சென்றபோது, கரூர்-கோவை சாலையில் மணிபர்ஸ் ஒன்றை கண்டெடுத்தார்.
அதில் ஒரு ஏடிஎம் கார்டு, ரூ.31,300 ரொக்கம் இருந்தது. இதை யடுத்து, அந்த மணிபர்ஸை அங்குள்ள சோதனைச் சாவடியில் இருந்த பெண் காவலர் வினேகாயிடம் மஞ்சு ஒப் படைத்தார். அந்த மணிபர்ஸில் முகவரி, தொடர்பு எண் எதுவும் இல்லாத நிலையில், அதிலிருந்த ஏடிஎம் கார்டை வைத்து வங் கியை தொடர்புகொண்ட காவலர் வினேகா, பர்ஸின் உரிமையாளரான புலியூரைச் சேர்ந்த புவனேஸ்வரியை கண்டுபிடித்து, அங்கு நேரில் சென்று, பணத்துடன் பர்ஸை ஒப்படைத்தார்.
இதுகுறித்து எஸ்.பி சசாங்சாய் அறிந்ததும், மஞ்சு மற்றும் வினே கா ஆகியோரின் நேர்மை, நன்னடத்தையைப் பாராட்டி, மஞ்சுவுக்கு நற்சான்றிதழ், நினைவுப் பரிசு, வினேகாக்கு நற்சான்றிதழ் வழங்கி நேற்று பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT