Published : 03 Jun 2021 03:15 AM
Last Updated : 03 Jun 2021 03:15 AM
ஆம்பூர்: வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை பொருட்கள் நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கன்கார்டியா மேல்நிலை பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜேபஸ் சந்திரசேகரன் முயற்சியால் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் உதவியுடன் கரோனா மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவி, முகக் கவசங்கள், பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்ட பொருட்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக நேற்று வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் ஆம்பூர் எம்எல்ஏ அ.செ.வில்வ நாதன் ஆகியோர் அந்த பொருட்களை பெற்றுக் கொண்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜேபஸ் சந்திரசேகரன், ஆம்பூர் தனியார் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜோயல் நேசராஜ், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT