Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டத்தின் தலைமை பொதுமேலாளர் பொறுப்பேற்பு :

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டத்தின் புதிய தலைமைப் பொது மேலாளராக ஜி.முரளிதரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டத்தின் தலைமைப் பொது மேலாளராக இருந்த வி.ஜெகதீசன், கடந்த 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து புதிய தலைமைப் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.முரளிதரன், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், மத்திய தொலைத்தொடர்பு துறையின் 1986-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு முதன்மை பொது மேலாளராக கோவையில் பணியாற்றி வந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x