Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

12 ஐஏஎஸ் அதிகாரிக்கு புதிய பதவி :

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்புவெளியிட்ட அறிவிப்பு:

நில சீர்திருத்த ஆணையராக இருந்த ஜக்மோகன் சிங் ராஜு,டெல்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர்-1 ஆகவும்,சமூக நலத் துறை செயலராகஇருந்த எஸ்.மதுமதி, ஆதிதிராவிடர் நல ஆணையராகவும், உணவுப் பொருள் வழங்கல் ஆணையராக இருந்த சஜ்ஜன் சிங் ஆர்.சவான், மீன்வளத் துறை கூடுதல் ஆணையராகவும், சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், தோட்டக்கலைத் துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரி, ஊரக வளர்ச்சித் துறை இணைசெயலராகவும், மதுரை மாவட்டமுன்னாள் ஆட்சியர் டி.அன்பழகன், சர்க்கரைத் துறை கூடுதல் ஆணையராகவும், சமக்ர சிக்‌ஷா கல்வித் திட்டத்தின் முன்னாள் கூடுதல் திட்ட இயக்குநர் எஸ்.அமிர்தஜோதி, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை இணை செயலராகவும், தருமபுரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா, உயர்கல்வித் துறை இணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பெட்ரோலியத் துறைஇணை செயலராக இருந்த ஆசிஷ் சாட்டர்ஜி, டெல்லி தமிழ்நாடு இல்லஉள்ளுறை ஆணையர்-2 ஆகவும்,தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் டி.கிறிஸ்துராஜ், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை துணை செயலராகவும், தமிழ்நாடு மின் நிதிக் கழக தலைவராக இருந்த சந்திரகாந்த் பி.காம்ப்ளே, திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக இருந்த எம்.சுதாதேவி, தமிழ்நாடு நீர்வடிநிலப் பகுதி மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x