Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

விவசாய தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த மயில்கள் :

கிணத்துக்கடவு அடுத்த பனப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் 7 மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், 7 மயில்களின் உடல்களையும் மீட்டனர்.

விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்டிருக் கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வனஉயிரின குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயில்களின் உடற்கூறு ஆய்வு கிடைத்தபின்பு, தொடர்புடைய நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 22-ம்தேதி செஞ்சேரிமலை நகரக்கலம்பையில் உள்ள விவசாய தோட்டத்தில் 5 மயில்கள் உயிரிழந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x