Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

மே மாத மின்கட்டணம் செலுத்த வழிமுறைகள் : ஈரோடு மின்வாரியம் அறிவிப்பு :

ஈரோடு: ஈரோட்டில் மே மாத மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படாதவர்கள், மின்கட்டணம் செலுத்துவது குறித்து மின்வாரியம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக ஈரோடு மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கு.இந்திராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு மின்வாரிய மின் கணக்கீட்டாளர்கள் மே மாத மின் கணக்கீடு செய்ய வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர மின் இணைப்புகளுக்கு நேரில் செல்ல இயலாத நிலையில் உள்ளது. இவ்வாறு கணக்கீடு செய்ய முடியாத இணைப்புதாரர்கள், 2019-ம் ஆண்டு, மே மாத மின் கட்டணத்தை உத்தேச தொகையாக செலுத்தலாம். அந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக நுகர்வோர் கருதினால், கடந்த மார்ச் 2021 மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம். மேலும், நுகர்வோரே தங்களது மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப் வாயிலாக மின்வாரியத்திற்கு அனுப்பும் பட்சத்தில், அதற்குரிய மின் கட்டணம் தெரியப்படுத்தப்படும்.

மின்சார மீட்டரில் மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து, 94458519, - 9442591822, 9445852180, 9445852190, 9445852150, 9994456233, 9445851900 என்ற எண்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x