Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

லாரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை

கரோனா தாக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் லாரி உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருப்பதாவது: ஏற்கெனவே கடுமையான டீசல் விலை உயர்வு, டோல்கேட் கட்டணம், காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு ஆகியவற்றால் லாரித் தொழில் மோசமாகியிருந்தது.

தற்போது கரோனா தாக்கத்தில் இந்த தொழிலின் நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இத்தொழிலை கவனிக்காமல் விடுவது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்வார்களா?.

கரோனா தாக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் லாரி உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணங்களை மத்திய, மாநில அரசுகள் வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x