Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு சலுகை :

சென்னை

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

மாநிலம் முழுவதும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் 7-ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் வரும் 6-ம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x