Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM
மாமல்லபுரம் அருகே சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் அணுசக்தி துறை ஊழியர்களை ஏற்றி வந்ததாக தனியார் நிறுவனப் பேருந்துகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டதாக எண்ணெய் ஆலை மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் போக்குவரத்துக்காக தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் அலுவலர்கள் நேற்றுமாமல்லபுரம் அருகே தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்துகளில் ஆய்வு செய்தனர். இதில்சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், இருக்கைகளின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் தொழிலாளர்களை ஏற்றிவந்தது தெரிந்தது. இதையடுத்து, 7 தனியார் பேருந்துகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருக்கழுக்குன்றம்
இதையடுத்து, எண்ணெய் ஆலைக்கு ரூ.10 ஆயிரம், கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, நகரப் பகுதியில் ஊரடங்கை மீறி விற்பனையில் ஈடுபட்ட மளிகைக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT