Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

ஊத்துக்கோட்டை, பாலவாக்கம் பகுதிகளில் 8-ம் தேதி வரை மின் விநியோகம் நிறுத்தம் :

திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை, பாலவாக்கம் பகுதிகளில் இன்று முதல், 8-ம் தேதிவரை மின்விநியோகம் நிறுத் தப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை, பாலவாக்கம் துணைமின் நிலையங்களில் உள்ள மின்சாதனங்கள் மற்றும் மின்பாதைகளில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

காலை 9 முதல் பகல் 12 வரை

ஆகவே, இவ்விரு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்றுமுதல் (ஜூன் 2) 8-ம் தேதி வரை, நாள்தோறும் காலை 9 மணிமுதல், பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதில், இன்று (ஜூன் 2) ஆலங்காடு, தாமரைக்குப்பம், தொம்மரைமேடு, தாராட்சி, பால்ரெட்டி கண்டிகை, மேல் சிற்றம்பாக்கம், கீழ்சிற்றம்பாக்கம், சீத்தஞ் சேரி, அம்பம்பாக்கம், பென்னலூர்பேட்டை, இராமலிங்கா புரம், பெருஞ்சேரி, கச்சூர், சென்னங்காரனை, பனப்பாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

நாளை (ஜூன் 3) மாளந்தூர், மாம்பாக்கம், வேளாகபுரம், மாமண்டூர், நாவல்குப்பம், அனந்தேரி, பிளேஸ்பாளையம், கூனி பாளையம், சீனிவாசபுரம், அல்லிக்குழி, கம்மார்பாளையம், ராசபாளையம், டி.பி.புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட இருக்கிறது.

4-ம் தேதி, ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் ரோடு, கொய்யா தோப்பு, அரசு மருத்துவமனை, சூளைமேனி, பாலவாக்கம், ஜெ.ஜெ.நகர், லட்சுவாக்கம் ஆகிய பகுதிகளிலும், 5-ம் தேதி டி.ஆர்.என்டர்பிரைசஸ், ஜி.எச். இந்தியா, டி.எம்.சி. இந்தியா ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

7-ம் தேதி பிளேஸ்பாளையம், கூனி பாளையம், சீனிவாசபுரம், அல்லிக்குழி, கம்மார்பாளையம், ராசபாளையம், டி.பி.புரம், பேரண்டூர், செஞ்சியகரம் ஆகிய பகுதிகளிலும், 8-ம் தேதி ஜி.எச். இந்தியா, டி.எம்.சி. இந்தியா, ஏ.கே.எஸ்.இன்ஜினியரிங் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்மின் பகிர்மானக் கழகத்தின் திருவள்ளூர் மின் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x