Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

எஸ்ஆர்எம் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரிக்கு தேசிய தரச்சான்று :

எஸ்ஆர்எம் ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் கல்லூரிக்கு உலக மனித ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் சார்பில் வழங்கப்பட்ட தரச் சான்றிதழ்.

சென்னை

நாட்டின் சிறந்த ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியாக எஸ்ஆர்எம் ஓட்டல் மேனேஜ் மென்ட் மற்றும் கேட்டரிங் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் உள்ள உலக மனித ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், நாட்டில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப கல்லூரிகளை ஆய்வு செய்து தேசிய அளவில் தரவரிசை சான்று வழங்கி வருகிறது.

அதன்படி 2021-ம் ஆண்டுக்கான விருதுகளை வழங்குவதற்காக அந்த நிறுவனம் நாடுமுழுவதும் ஆய்வை நடத்தியது.இதில் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் உள்ள கட்டமைப்புகள், பயிற்சி முறைகள், வளாக தேர்வு முறை உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், எஸ்ஆர்எம் ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் கல்லூரி நாட்டின் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கு முதலிடம் சான்றிதழ் வழங்கப்பட் டுள்ளது.

அதேபோல தமிழ்நாட்டில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரிகளில் உள்ள கட்டமைப்புகள், ஆராய்ச்சி, பயிற்சி முறைகள், வளாக தேர்வு முறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள்தொடர்பாக ஆய்வு செய்ததில்,எஸ்ஆர்எம் ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் கல்லூரி மாநிலத்தின் சிறந்தகல்லூரியாக தேர்வு செய்யப்பட் டுள்ளது.

இவ்வாறு எஸ்ஆர்எம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x