Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

கடலூர் உழவர் சந்தை சார்பில் : வீடுகளுக்கே வந்து காய்கறி விற்பனை :

கடலூர் உழவர் சந்தை சார்பில் 100 ரூபாய் காய்கறித் தொகுப்புகளை வீடுகளுக்கேச் சென்று வழங்கும் வேளாண் துறையினர்.

கடலூர்: முழு ஊரடங்கின் காரணமாக ஏற்படும் காய்கறி தட்டுப்பாடுகளைத் தவிர்க்க கடலூர் உழவர்சந்தை நிர்வாகத்தின் மூலம் 25 வாகனங்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய உரிய ‘பாஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காய்கறி வாகனங்கள் சென்று சேர முடியாத பகுதிகளில் வசித்து வரும் மக்களின் காய்கறிகள் தேவையை பூர்த்தி செய்திட தொலைபேசி அழைப்பு மூலம் வரும் காய்கறிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக 100 ரூபாய் விலை மதிப்பிலான காய்கறிகள் தொகுப்பு பை வீடுகளுக்கே கொண்டு வந்து தரப்படுகின்றன.

“மக்கள் விரும்பி கேட்கும் காய்கறிகளை நியாயமான விலையில் தருகிறோம்” என்று இதை விநியோகம் செய்பவர்கள் கூறுகின்றனர். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை துணை இயக்குநர் பிரேம்சாந்தியின் ஆலோசனையின் பேரில் உதவி வேளாண் அலுவலர்கள் சீனிவாசபாரதி, கார்த்திகேயன் ஆகியோர் இந்தப் பணியை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x