Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM
வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (26). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அஸ்வினி (23). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அஸ்வினி, சோம்பட்டில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கியிருந்து, மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் நோயின் தாக்கம் அதிகமான நிலையில், மயக்கமடைந்தார். அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அஸ்வினியின் அண்ணன் பழனி திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஸ்வினிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT