Published : 02 Jun 2021 03:14 AM
Last Updated : 02 Jun 2021 03:14 AM

ஊரடங்கில் வெளியே சுற்றிய 300 வாகன ஓட்டுநர்களுக்கு கரோனா பரிசோதனை :

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. தேவையில்லாமல் பலர் வாகனங்களில் சுற்றி வருவதும் தொடர்கிறது. ராஜபாளையம் நகரில் வெளியே சுற்றுபவர்களுக்குக் கட்டாய கரோனா பரிசோதனை செய்ய டிஎஸ்பி நாகசங்கர் உத்தரவிட்டார். அதையடுத்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அருகே போலீஸார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனங்களை ஓட்டி வந்த 300 பேருக்கு மருத்துவப் பணியாளர்கள் மூலம் கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x