Published : 02 Jun 2021 03:14 AM
Last Updated : 02 Jun 2021 03:14 AM
கோவில்பட்டி நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுகளுக்கே சென்று மளிகை பொருட்கள் வழங்க 63 கடைகளுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை மட்டுமேபொருட்கள் வழங்க வேண்டும்என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஓ.ராஜாராம் கூறும்போது, “அனுமதி வழங்கப்பட்டுள்ள மளிகைக் கடைகளில் எக்காரணத்தை கொண்டும், கடையைதிறந்து வைத்து வியாபாரம் செய்யக்கூடாது. மீறி வியாபாரம் செய்தால் கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மீறியதாக கடைக்கு சீல் வைக்கப்படும். மளிகைக் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் உரிமையாளர் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அனுமதி பெற்றவர்கள் மட்டுமே டோர் டெலிவரி செய்ய செல்ல வேண்டும்,” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT