Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு - மேக்னசைட் நிறுவனத்தில் கருணை அடிப்படையில் பணி :

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் பணியாற்றி கடந்த 4 ஆண்டுகளில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.அசோக், ஆர்.எம்.மோகன்ராஜ், எஸ்.சாந்தி, பி.குமார், ராணி, கே.இந்துமதி, ஆர்.ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு தொழிலாளர் பணிக்கான ஆணைகள், ஆர்.ராஜா ஜெயசீலன் என்பவருக்கு இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை அமைச்சர் துரைமுருகன் நேற்று வழங்கினார்.

இந்த தொழிலாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளருக்கு பணியில் சேர்ந்த நாளில் இருந்து ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,500-ம், இளநிலை உதவியாளருக்கு ரூ.7,600-ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு தகுதிகாண் பருவம் நிர்ணயிக்கப்பட்டு, காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன மேலாண் இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி, மேலாளர் எஸ்.தங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x