Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM
புதுடெல்லி: நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதலாக கரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. இம்மாத தொடக்கத்தில் இதுவரை இல்லாத அளவாக 4 லட்சத்தையும் தாண்டி தினசரி தொற்று பதிவாகியது. இதனால் நாட்டு மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வும் ஏற்பட்டது.
ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் தொடர்ந்து 14-வது நாளாக 3 லட்சத்துக்கும் குறைவாகவே தினசரி தொற்று பதிவாகி வருகிறது. நாடு முழுவதும் நேற்று 1,65,553 பேருக்கு மட்டுமே பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது, கடந்த 46 நாட்களில் இல்லாத மிகக் குறைந்த அளவிலான தினசரி தொற்று எண்ணிக்கை ஆகும். இதனால், இந்தியாவில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21, 14,508-ஆக குறைந்திருக்கிறது. இதனிடையே, கரோனா பாதிப்புக்கு நேற்று மட்டும் 3,460 பேர் உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,25,972-ஆக உயர்ந்துள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT