Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM

கோவையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - தமிழகத்தில் ஒரே நாளில்கரோனாவால் 493 பேர் உயிரிழப்பு : புதிதாக 28,864 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் ஒரே நாளில் கரோனாவால் 493 பேர் உயிரிழந்தனர். புதிதாக 28,864 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 16,238, பெண்கள் 12,626 என மொத்தம் 28,864 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 3,537, சென்னையில் 2,689, ஈரோட்டில் 1,784, திருப்பூரில் 1,496, சேலத்தில் 1,295, செங்கல்பட்டில் 1,194, திருச்சியில் 1,128 பேருக்கு வைரஸ்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்து 68,580-ஆக அதிகரித்துள்ளது.

33 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

இதுவரை சென்னையில் 4 லட்சத்து 59,499 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 39,280 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 5,795 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 32,982 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். கோவையில் 39,047, சென்னையில் 35,423 உட்பட தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 5,546 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 493 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 93 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,754-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 7,008 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 லட்சத்து 1,930, கோவையில் ஒரு லட்சத்து 67,003, செங்கல்பட்டில் ஒரு லட்சத்து 39,263, திருவள்ளூரில் ஒரு லட்சத்து 475 என்ற எண் ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

2.75 கோடி பரிசோதனைகள்

தமிழகத்தில் 269 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 75 லட்சத்து 11,443 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 73,351 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x