Published : 31 May 2021 03:13 AM
Last Updated : 31 May 2021 03:13 AM

பொறியாளரின் மகள் திருமணத்தில் முன்களப் பணியாளருக்கு அசைவ விருந்து :

இளையான்குடி: தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு பணியில் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரோனோ ஊரடங்கால் இளையான்குடியைச் சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் துணைச் செயலாளரும், பொறியாளருமான சைபுல்லா தனது மகள் திருமணத்தை எளிமையாக நடத்தினார். இத்திருமணத்தையொட்டி, கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு அசைவ விருந்து அளிக்க முடிவு செய்தார். அதன்படி இளையான்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், போலீஸாருக்கு சமூக இடைவெளியுடன் அசைவ விருந்து அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x