Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM
டெல்லியில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர இதர கடைகள் மூடப்பட்டன.
அவ்வப்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு தற்போது நாள்தோறும் 1,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இந்த பின்னணியில் ஊர டங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்து டெல்லி அரசு தீவிர ஆலோசனை நடத்தியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று அறிவித்தார். காணொலி வாயிலாக நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் அவர் கூறிய தாவது:
டெல்லியில் வைரஸ் தொற்று குறைந்திருக்கிறது என்பதற்காக ஊரடங்கை முழுமையாக ரத்து செய்ய முடியாது. மே 31-ம் தேதி முதல் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படும். கட்டுமான பணிகள் தொடரவும் ஆலைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்படும். மேலும் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்படும். எனினும் வைரஸ் பரவலை தடுக்க பெரும்பாலான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். இதற்கு பொதுமக்கள் முழுமை யான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT