Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் : 1.86 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு :

புதுடெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 1.86 லட்சம் பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று காலை 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 364 ஆகும். இது கடந்த ஏப்ரல் 14-ம் தேதியில் இருந்து மிகவும் குறைவான பாதிப்பாகும். புதிதாக பாதிக்கப்பட்டோரைத் தொடர்ந்து நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 75 லட்சத்து 55 ஆயிரத்து 457 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் நாடுமுழுவதும் தினசரி இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து 3,000-க்கும் அதிகமாகவே உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 3,660 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கரேனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமையன்று ஒரே நாளில் நாடு முழுவதும் 20 லட்சத்து 70 ஆயிரத்து 508 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரே நாளில் 29 லட்சத்து 19 ஆயிரத்து 699 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x